புதன், 28 மார்ச், 2012


நான் பிறந்து வளர்ந்த
மதுரை புதிதாய் தெரிந்தது
அவளை பார்த்த நொடி முதல்

வாய் வழியில் மழலை மொழி
பேசத்தெரியாவிட்டாலும்
கண்பார்வை வலி பேசும்
மழலை ஆனேன்

நான் தலைகுனிந்து
அவள் காலை தொட்ட
நிமிடத்திலேயே
மோட்சத்தை தொட்டுவிட்டேன்

அவளோடு நான் கழித்த
பொழுதுகள்
நிழற்படமாய் நாளும் ஓடுகிறது
என் நினைவில்

என் உயிரை
எனை அறியாமல் அவள் வசம்
கொடுத்துவிட்டு
அவள் நிழலாய்
நான் மாறக்கண்டேன்

அவள் எனைக் கண்டபொழுது
அவள் கண்ணில் கண்ட
ஏக்கத்தை
கவிதையில் வர்ணிக்க முயற்சித்தேன்
முடியவில்லை
என் கண்ணீரோடு முடித்துவிட்டேன்

பிரசன்னா தமிழ்
என் 
இரத்த சிவப்பணுக்கள் 
யாவும் 
வெள்ளையணுக்களாய்
மாறினாலும் 
தடுக்க முடியவில்லை 

விந்தணுவின் விதையிலிருந்து 
வந்த அவளின் 

காதல் நோயை 

பிரசன்னா தமிழ் 
நான் காய்ச்சல் என்று 
மருத்துவரை அணுக 
அவர் 
வைரஸ் காய்ச்சல் 
என்று மருந்தாக
உன் முத்தத்தை 

பின்புதான் 
என் பின் மண்டைக்கு 
உரைத்தது 
அது 

காதல் வைரஸ் என்று 

பிரசன்னா தமிழ் 

ஞாயிறு, 25 மார்ச், 2012

நிலவாய் அவள் முகம்

காலத்தின் கட்டாயத்தால்

நீ
கடல் கடந்து சென்றாய்

அன்று முதல்
அந்த கடலில் நிலவாய்
அவள்முகம் 
நித்திரை வேளைகளில்