எல்லோருக்கும் எண் கணித ராசி
பார்த்து பெயர் வைப்பார்கள்
ஆனால்
எங்களுக்கோ எண்ணயே பெயராய்
வைத்துள்ளார்கள்
ஐந்தறிவு ஜீவன்களை ஆசையாய்
செல்ல பெயரோடு அழைப்பவர்கள்
எங்களுக்கென்று தனிப்பெயர் இருந்தும்
அது என்றே அழைகின்றனர்
பிரம்மன் எங்கள் பிறப்பில் செய்த
தவறிற்கு
பிரம்படி வாங்கும் பிணமாய் போகின்றோம்
தினம் தினம்
உங்களை போலவே அழுதுகொண்டே பிறந்த
குழந்தைகள் நாங்கள்
ஆனால் இன்றும் அழுது கொண்டுதான்
இருக்கின்றோம் உங்கள் வாய் வழி வரும்
வார்த்தைகளை கேட்டு
கடவுளுக்கு ஆடுகளை பலி கொடுப்பதை
போலதான் எங்களையும்
பலி கொடுக்கின்றீர்கள் இந்த
சமுகத்தில் நரம்பில்லா நாக்கை வைத்து
உலகம் எனும் கதம்பத்தில் யார் வேண்டுமானாலும்
பிடுங்க கூடிய காகித பூக்களாய் நாங்கள்
ஜாடையாக குத்தி பேசும் போது
ஒவ்வொரு வார்த்தையும்
கூனிக்குறுகச் செய்கிறது
எல்லோருக்கும் இரத்தம் சிவப்பு
என சிந்திக்க மறந்த
ஆண்களின் பார்வையில் அவமான சின்னங்கள்
பெண்களின் பார்வையில் அவல ஜென்மங்கள்
அன்று அரண்மனையை காத்த
அண்ணக்கர்கள் நாங்கள்
இன்று அழுகை ஒன்றையே அரவணைப்பாய்
கொண்ட அபல அரவாணிகள் நாங்கள்
எங்களுக்காக ஒரு வட்டம் வரைந்து
வாழ்ந்தாலும்
சம்பட்டி அடி அடிக்கின்றது
காமகனின் கண் பார்வைகள்
மண்சோறு தின்றோ
அலகு குத்தியோ காவடி சுமந்தோ
இந்த வரம் வாங்கவில்லை
பிறப்பினால் ஒரு முறை சபிக்கப்பட்டாலும்
ஏன் என்ற விடையை கூட அல்ல
கேள்வியை தேடி தேடி
வளர்பிறை இல்லாத
தேய்பிறை நிலவாய் நிலைகுலைந்து
போகின்றோம்
முடிவு தெரியாமலும் முகவரி இல்லாமலும்
முக்காடு போட்டு முகம் மறைத்து
முடங்கி கிடந்தாலும்
எங்கள் சமுகத்தின் சூன்ய முடிச்சு அவிழாத
என்று பெருமூச்சு விட்டபடி
பெரு முயற்சி எடுத்து வருகின்றோம்
எத்தனை முறை விடையை தேடி சென்றாலும்
கேள்வியாகத்தான் இருந்கின்றோம்
எங்களுக்கு
பிரசன்னா தமிழ்
பார்த்து பெயர் வைப்பார்கள்
ஆனால்
எங்களுக்கோ எண்ணயே பெயராய்
வைத்துள்ளார்கள்
ஐந்தறிவு ஜீவன்களை ஆசையாய்
செல்ல பெயரோடு அழைப்பவர்கள்
எங்களுக்கென்று தனிப்பெயர் இருந்தும்
அது என்றே அழைகின்றனர்
பிரம்மன் எங்கள் பிறப்பில் செய்த
தவறிற்கு
பிரம்படி வாங்கும் பிணமாய் போகின்றோம்
தினம் தினம்
உங்களை போலவே அழுதுகொண்டே பிறந்த
குழந்தைகள் நாங்கள்
ஆனால் இன்றும் அழுது கொண்டுதான்
இருக்கின்றோம் உங்கள் வாய் வழி வரும்
வார்த்தைகளை கேட்டு
கடவுளுக்கு ஆடுகளை பலி கொடுப்பதை
போலதான் எங்களையும்
பலி கொடுக்கின்றீர்கள் இந்த
சமுகத்தில் நரம்பில்லா நாக்கை வைத்து
உலகம் எனும் கதம்பத்தில் யார் வேண்டுமானாலும்
பிடுங்க கூடிய காகித பூக்களாய் நாங்கள்
ஜாடையாக குத்தி பேசும் போது
ஒவ்வொரு வார்த்தையும்
கூனிக்குறுகச் செய்கிறது
எல்லோருக்கும் இரத்தம் சிவப்பு
என சிந்திக்க மறந்த
ஆண்களின் பார்வையில் அவமான சின்னங்கள்
பெண்களின் பார்வையில் அவல ஜென்மங்கள்
அன்று அரண்மனையை காத்த
அண்ணக்கர்கள் நாங்கள்
இன்று அழுகை ஒன்றையே அரவணைப்பாய்
கொண்ட அபல அரவாணிகள் நாங்கள்
எங்களுக்காக ஒரு வட்டம் வரைந்து
வாழ்ந்தாலும்
சம்பட்டி அடி அடிக்கின்றது
காமகனின் கண் பார்வைகள்
மண்சோறு தின்றோ
அலகு குத்தியோ காவடி சுமந்தோ
இந்த வரம் வாங்கவில்லை
பிறப்பினால் ஒரு முறை சபிக்கப்பட்டாலும்
ஏன் என்ற விடையை கூட அல்ல
கேள்வியை தேடி தேடி
வளர்பிறை இல்லாத
தேய்பிறை நிலவாய் நிலைகுலைந்து
போகின்றோம்
முடிவு தெரியாமலும் முகவரி இல்லாமலும்
முக்காடு போட்டு முகம் மறைத்து
முடங்கி கிடந்தாலும்
எங்கள் சமுகத்தின் சூன்ய முடிச்சு அவிழாத
என்று பெருமூச்சு விட்டபடி
பெரு முயற்சி எடுத்து வருகின்றோம்
எத்தனை முறை விடையை தேடி சென்றாலும்
கேள்வியாகத்தான் இருந்கின்றோம்
எங்களுக்கு
பிரசன்னா தமிழ்





