ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

நட்ப்போடும் காதலோடும்

நட்ப்போடும் காதலோடும் 

தயக்கத்துடன் அறிமுகமான 
நாம்
இன்று தாராளமாய் அரவணைத்து 
கொள்கிறோம்
நட்பின் போர்வையில்

எனது கனவுகள் அனைத்தும்
விதையாய் விதைத்தேன் உன்னுள்
நட்பு எனும் கரிசல் மண் துணையுடன்

நம் கைகள் கூட சிறகுகளாக மாறின
நட்பு எனும் வானில் சிறகடிக்க

நாள்தோறும் நாம் உரையாடினாலும்
நாம் பிரிகையில் ஏற்படும்
மௌனப்பார்வைகளும்
மௌன வார்த்தைகளும் தான்
என் கனவில்
இதயம் எதிரொலிக்க பேசுகிறது

அழுது கொண்டே பிறக்கும்
குழந்தை போலத்தான் பிறந்தது
நம் காதலும்
நம் மௌனத்தின் வழி மௌனமாய்

நட்பின்பால் பரிட்சியமான நாம்
காதலன் என்ற உருவில்
நீ
புதிதாய் பதிந்தாய் என் சிந்தையில்

உனை பார்க்கும் முன்
காதலை சொல்லிவிடத் துடிக்கும்
என் இதயம் கூட மயங்கி விடுகிறது
உன் வசீகரப் பார்வையை பார்த்தவுடன்

நாளுக்கு நாள் என் நிழல் நீயாகக் கண்டேன்

உள்ளிருப்பு போராட்டம் போல்
எனக்குள்ளும் போராட்டம்

என் சிந்திக்கும் என் மனதிற்கும்

மனதில் உள்ள காதலை சொல்ல
முற்ப்பட்டால்
சிந்தை தடுக்கிறது

சிந்தைப்படி நட்புடனே இருப்போம்
என்றால்
மனம் கதறுகிறது

நட்ப்போடே இருந்து விடுவோம்
என எனக்கு நானே சமாதானம்
ஆனாலும்
சுனாமி போல் எனை தாக்குகிறது
உனது நித்திரை நினைவலைகள்

நடப்போடு நம் கைகள் உரசினாலும்

நீ
என்னை கனவில் கட்டியனைத்ததுதான்
கண் முன்னே வந்து செல்கிறது

என் காதலை சொல்லாமல்
சொல்லிவிடலாம்
என நான் முயற்சித்தாலும்
நீ பாடத்தை புரிந்து கொள்ளும்
அளவிற்க்கு கூட
என் காதலை புரிந்து கொள்ளவில்லை

காந்தியின் அகிம்சை வழியில்
போராட்டம்
எனக்குள் நடந்தாலும்
பட்ட காயங்கள் எல்லாம்
உன் காதலைத்தான் மருந்தாய்
கேட்கிறது

என் முற்றத்து நிலாவில்
உன் முகம் பார்த்து
நான் எழுதிய கடிதங்கள்
கடலை காணமல்
போகச் செய்துவிடும்

உனை நினைத்து
நான் எழுதி சுயநினைவற்று இருக்கும்
என் காதல் வரிகளுக்கு
சுயநினைவு வருவது எப்போது

மண்டி இட்டு தொழுகும்
நான்
கை கூப்பி தொழுவது எப்போது

என் பெயரின் பின்னால்
உன் பெயரை உரிமையுடன்
எழுதுவது எப்போது

என் காதலை காலம்தான்
உனக்கு உணர்த்தும்
என்ற
நம்பிக்கையில்

பிரசன்னா தமிழ்

3 கருத்துகள்:

thendralsaravanan சொன்னது…

”உனை பார்க்கும் முன்
காதலை சொல்லிவிடத் துடிக்கும்
என் இதயம் கூட மயங்கி விடுகிறது
உன் வசீகரப் பார்வையை பார்த்தவுடன்
நாளுக்கு நாள் என் நிழல் நீயாகக் கண்டேன்”

...அழகான வார்த்தை பிரயோகம்டா....அருமை! ஒவ்வொரு வரியும் அனுபவித்துபடித்தேன்.. சொல்லாடலை கண்டு வியந்தேன்!!!

சிவகுமாரன் சொன்னது…

அருமை. ஒவ்வொரு வார்த்தையிலும் காதல் பொங்குகிறது.
சிறு சிறு எழுத்துப் பிழைகள் தவிர்க்கவும்

காயத்ரி வைத்தியநாதன் சொன்னது…

பிரிகையில் ஏற்படும்
மௌனப்பார்வைகளும்
மௌன வார்த்தைகளும் தான்
என் கனவில்
இதயம் எதிரொலிக்க பேசுகிறது...அருமை..

//என் பெயரின் பின்னால்
உன் பெயரை உரிமையுடன்
எழுதுவது எப்போது// ம்ம்