வெள்ளி, 6 ஏப்ரல், 2012

அன்பே சிவம்

கண்களால் கண்டு கொள்ளப்படாத வரையில்தான்
அவன் கடவுள்
ஒரு வேளை அவன் கண்டு கொள்ளப்பட்டால்
எனக்கு ஏன் இதை செய்யவில்லை என்று
கடவுளையும் கல்லால் அடிக்கும் சமூகம் இது

நம்மை கடவுளாக நினைத்து
கை கூப்பி உதவி கேட்டால்
இல்லை என்று சொல்லி
இல்லாத கடுளின் முன்பு
கை கூப்பி நிற்கும் சமூகம் இது

பட்டினியால் பலபேர் படுத்திருக்க
உனக்கு படையல் படைக்கும் சமூகம் இது

வறுமை ஒரு புறம் வாட்டி எடுக்க
உனக்கு கோடி கோடியாய்
கொட்டி கொடுக்கும் சமூகம் இது

உனக்கு நரபலி கொடுத்தால்
நகரம் சொர்க்கமாகும் என்று
பலி கொடுத்து கொடுத்து
சொர்க்கத்தை நரகமாக்கும்
சமூகம் இது

நீ இருக்கும் கருவூலத்திலேயே
இன்று பல கருக்களை காணிக்கையாக்கும்
சமூகம் இது

மணி அடித்தால் சாப்பாடு என்று
உனக்கு மணி அடித்தே
மணியை கழிக்கும் சமூகம் இது

உன்னை கண்டால் நல்ல நேரம்
கதவை தட்டும் என்று
கிடைக்கும் நேரத்தை எல்லாம்
கண்மூடியே மூடனாய் போகும்
சமூகம் இது

உன்னை தரிசனம் செய்தால்
சங்கடங்கள் நீங்கும் என்று
தாயை விரட்டும் சமூகம் இது

இதற்க்கு இந்த சமூகம்தான்
சுமூக முடிவு எடுக்க வேண்டும்

அன்பே சிவம் எனும்

பிரசன்னா தமிழ்

1 கருத்து:

thendralsaravanan சொன்னது…

அருமை அருமை!அன்பே சிவம்!